வீரவநல்லூர் செயின்ட் ஜாண்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, சேரன்மகாதேவி கல்வி மாவட்ட அலுவலர் சுடலை தலைமை வகித்தார்.
கல்வியில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு வீரவநல்லூர் ஜவுளிக் கடை நிறுவனர் எம்.எம்.எம். இப்ராஹிம், பதக்கங்கள், பரிசுகள் வழங்கினார்.
பள்ளி நிறுவனர் மங்கையர்கரசி, பள்ளித் தாளாளர் சாமுவேல் ஞானமுத்து ஆகியோர் பரிசு பெற்ற மாணவர்களை பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.