மனித உரிமை காக்கும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை

நடிகர் கார்த்திக்கின் மனித உரிமை காக்கும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது.

நடிகர் கார்த்திக்கின் மனித உரிமை காக்கும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது.
மாவட்டச் செயலர் எஸ்.துர்க்கைலிங்கம் தலைமை வகித்தார். இ.ராஜா, கே.வேதாந்தம், என்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கரையிருப்பு முருகன், நான்குனேரி செல்வம், நெல்லை சுரேஷ், மூன்றடைப்பு முத்துக்குமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
சென்னை அல்லது மதுரையில் நடிகர் முத்துராமனுக்கு மணிமண்டபம் கட்டிக் கொடுக்க வேண்டும்; மனிதஉரிமை காக்கும் கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது; நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் கார்த்திக்கை போட்டியிடக் கோருவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. 
முன்னதாக நடிகர் முத்துராமன் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com