பர்கிட்மாநகரில் எஸ்டிபிஐ மகளிரணி ஆலோசனைக் கூட்டம்

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மகளிரணியான விமன்ஸ் இந்தியா மூவ்மென்ட் அமைப்பின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மகளிரணியான விமன்ஸ் இந்தியா மூவ்மென்ட் அமைப்பின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆலோசனைக் கூட்டம் பர்கிட்மாநகரில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.அப்துல்கனி தலைமை வகித்தார்.  விமன்ஸ் இந்தியா மூவ்மென்ட் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவி
மும்தாஜ் ஆலிமா, புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கிப் பேசினார்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலர் பர்கிட் அலாவுதீன், கிளைத் தலைவர் சுபைர் முஹம்மது உள்பட பலர் கலந்துகொண்டனர்.  மஹ்முதா ரினோசா நன்றி கூறினார்.
பர்கிட் மாநகரம் பகுதியில் போதுமான அளவில் குடிநீர் விநியோகிக்கக் கோருவது. பர்கிட் மாநகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, சுகாதார மையம் ஆகியவற்றை தரம் உயர்த்தி கூடுதல் கட்டடங்கள்,
வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகளிடம் மனு அளிப்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com