களக்காடு மீரானியா மேல்நிலைப் பள்ளியில் ஒலி மாசு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள் பங்கேற்ற ஒலி மாசு குறித்து நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை பள்ளியின் தாளாளர் பீர்முகம்மது தொடங்கி வைத்தார்.
பள்ளியின் தலைமையாசிரியர் மு. யாகத்அலிகான், உதவித் தலைமையாசிரியர் பீ. நாகூர்மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ச. சுப்பிரமணியன் ஒலி மாசு குறித்துப் பேசினார். இதில், தேசிய மாணவர் படைத் தலைவர் கி. அய்யப்பன், மாணவர்கள் கலந்துகொண்டனர்.