கீழப்பாவூர் ஏ.வி.உயர்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) நடைபெறுகிறது.
திருநெல்வேலி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் உதவியுடன், ராஜபாளையம் மனிதம் பவுன்டேசன், திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்தும் இம்முகாம் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது. ஆதார் கார்டு நகலுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.