திருநெல்வேலி மாவட்ட சிஐடியூ 12 ஆவது மாவட்ட மாநாடு குற்றாலத்தில் சனிக்கிழமை தொடங்கியது.
குற்றாலத்தில் இரண்டு நாள்கள் நடைபெறும் சிஐடியூ மாவட்ட மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் எம்.ராஜாங்கம் கொடியேற்றினார். தொடர்ந்து, நடைபெற்ற மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் எம்.வேல்முருகன் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் செண்பகம் அஞ்சலி தீர்மானங்களை வாசித்தார்.
மாநிலத் தலைவர் ஏ. சௌந்திரராஜன் மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசினார். மாவட்டச் செயலர் ஆர்.மோகன் வேலை ஸ்தபான அறிக்கையும், மாவட்டப் பொருளாளர் எஸ்.வண்ணமுத்து வரவு- செலவு அறிக்கையும் வாசித்தனர்.
இதில் மாநிலச் செயலர் ஆர்.ரசல், வரவேற்புகுழுச் செயலர் என்.லெனின்குமார், மார்க்சிஸ்ட் தென்காசி வட்டாரச் செயலர் எஸ்.அயூப்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வரவேற்புகுழுத் தலைவர் கே.மாரியப்பன் வரவேற்றார்.