செங்கோட்டை அருகே காட்டு பன்றி மீது ஆட்டோ மோதி கவிழ்ந்ததில் பெண் பலி

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை இரவு காட்டு பன்றி மீது ஆட்டோ மோதி கவிழ்ந்ததில் பெண் உயிரிழந்தார்.  


திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை இரவு காட்டு பன்றி மீது ஆட்டோ மோதி கவிழ்ந்ததில் பெண் உயிரிழந்தார்.  
செங்கோட்டை அருகேயுள்ள வடகரை பெரிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் மசூது மனைவி மஹ்மூதாள் (38). 
இவர், செங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து  தனது மகளை அழைத்துவர வடகரையிருந்து ஆட்டோவில் வந்தார். பண்பொழி, கரிசல் குடியிருப்பு விலக்கு அருகே வந்தபோது, சாலையை கடக்க முயன்ற காட்டுப் பன்றி மீது ஆட்டோ மோதி கவிழ்ந்தது.
இதில், ஆட்டோவில் வந்த மஹ்மூதாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
அச்சன்புதார் போலீஸார் சடலத்தை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com