பாளையங்கோட்டையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆதார் சேவை மையம் செயல்படவுள்ளது.
இது தொடர்பாக திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் இரா.சாந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்திய அஞ்சல் துறை சார்பில் திருநெல்வேலி அஞ்சல் கோட்டத்தில் உள்ள 3 தலைமை அஞ்சல் அலுவலகங்களிலும், 44 துணை அஞ்சல் அலுவலகங்களிலும் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்யும் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இயங்கி வரும் ஆதார் மையம் வரும் 14-ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படவுள்ளது. பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.