பாளை. தலைமை அஞ்சலகத்தில்ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆதார் சேவை மையம் செயல்படும்

பாளையங்கோட்டையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆதார் சேவை மையம் செயல்படவுள்ளது.


பாளையங்கோட்டையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆதார் சேவை மையம் செயல்படவுள்ளது.
இது தொடர்பாக திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் இரா.சாந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்திய அஞ்சல் துறை சார்பில் திருநெல்வேலி அஞ்சல் கோட்டத்தில் உள்ள 3 தலைமை அஞ்சல் அலுவலகங்களிலும், 44 துணை அஞ்சல் அலுவலகங்களிலும் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்யும் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இயங்கி வரும் ஆதார் மையம் வரும் 14-ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படவுள்ளது. பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com