பொட்டல்புதூரில் எஸ்.டி.பி.ஐ. பொதுக்கூட்டம்

பொட்டல்புதூரில் எஸ்டிபிஐ கட்சியின் 11ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சமூக நல்லிணக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.


பொட்டல்புதூரில் எஸ்டிபிஐ கட்சியின் 11ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சமூக நல்லிணக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, பேரவைத் தொகுதித் தலைவர் காஜா தலைமை வகித்தார். கட்சியின் கிழக்கு மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.ஏ. அப்துல்கரீம், மாவட்ட துணைத் தலைவர் கே.எஸ். சாகுல்ஹமீது, மாவட்ட பொதுச் செயலர் கோட்டூர் பீர் மஸ்தான், மாவட்டச் செயலர் பர்கிட் அலாவுதீன், பேரவைத் தொகுதி துணைத் தலைவர் செய்யது பாசில், பொருளாளர் துரைமுன்னா இபுராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுச் செயலர் உமர்பாருக், மாநிலச் செயலர் அகமது நவவி, பாப்புலர் ஃப்ரண்ட் மாநிலச் செயலர் முகைதீன் அப்துல் காதர், நேஷனல் விமன் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு உறுப்பினர் பாத்திமா ஆலிமா, அய்யா தர்மயுக வழிப்பேரவை நிறுவனர் தலைவர் பாலமுருகன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் பெண்களுக்கு பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன.  நகரச் செயலர் உசேன், விமன் இந்தியா மாவட்டச் செயலர் ரினோஷா உள்பட பலர் கலந்துகொண்டனர். 
தொகுதிச் செயலர் அப்துல் அஜீஸ் வரவேற்றார். முகம்மது அலாவுதீன் நன்றி கூறினார். பொட்டல்புதூர் மேற்குப் பேருந்து நிறுத்தத்தில் கட்சிக் கொடியை மாநில பொதுச் செயலர் ஏற்றினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com