சொக்கம்பட்டி அருகே லாரிக்கு தீ வைத்ததாக 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
சுந்தரேசபுரம் அருகேயுள்ள போகநல்லூர் அகதிகள் முகாமை சேர்ந்தவர் சந்திரகுமார். இவருக்குச் சொந்தமான லாரியை கடந்த மாதம் 4 ஆம் தேதி மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், லாரிக்கு தீவைத்ததாக, அதே பகுதியை சேர்ந்த சசி (18), காசிநாதன் (18), சஞ்சய் (18) ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.