மூத்த குடிமக்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம்

தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் நல உரிமைச் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் பெருமாள்புரத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் நல உரிமைச் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் பெருமாள்புரத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு, அமைப்பின் மாநிலத் தலைவர் சிவ.சோமநாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் எஸ்.கணபதியப்பன், மாநில பொருளாளர் கே.எஸ்.ஆறுமுகம், துணைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் சிவஞானம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தீர்மானங்கள்: இந்தியா முழுவதும் மக்களின் நம்பிக்கையைப் பெற்று மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்துத் தெரிவிப்பது; தமிழகத்தில் சமூக நலத்துறையில் இருந்து பிரித்து முதியோர் நலத்துறையை உருவாக்க வேண்டும்;  முதியோர் ஓய்வூதியத் திட்டத்தில் தகுதியுடைய அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; 7 வது ஊதியக்குழு திருத்திய ஓய்வூதியத்தின்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்; ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு கடந்த 1-7-2018 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய காப்பீட்டுத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com