தென்காசியில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

திருநெல்வேலி மேற்குமாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் தென்காசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மேற்குமாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் தென்காசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் முத்துபாண்டி தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலர்கள் ஆயான்நடராஜன்,பேபிரஜப்பாத்திமா,பொருளாளர் சேக்தாவூது,முன்னாள் அமைச்சர் தங்கவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் பொ.சிவபத்மநாதன் சிறப்புரையாற்றினார். தனுஷ் எம்.குமார் எம்.பி., விவசாய அணி மாநில துணைச் செயலர் செல்லப்பா, ஒன்றியச் செயலர் ராமையா உள்ளிட்டோர் பேசினர்.
முன்னாள் முதல்வர்  கருணாநிதியின் பிறந்த தினத்தை ஜூன் மற்றும் ஜூலை மாதங்கள் முழுவதும் பல்வேறு நல உதவிகள் வழங்கியும்,பொதுக்கூட்டங்கள்,ரத்ததான முகாம்கள் நடத்தியும் கொண்டாடுவது;  உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியின் மாநில இளைஞரணிச் செயலர் பதவியை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், ஒன்றியச் செயலர்கள் செல்லத்துரை,பொன்முத்தையா,ஜெயபாலன், நகரச் செயலர்கள் சேகனா, சங்கரன்,சார்புஅணி மாவட்ட அமைப்பாளர்கள் வழக்குரைஞர் ஆ.வெங்கடேசன்,திவான்ஒலி,பூங்கொடி,சார்பு அணி துணை அமைப்பாளர்கள் சீவநல்லூர்சாமித்துரை,வழக்குரைஞர் ராஜா,பொதுக்குழு உறுப்பினர்கள் லிங்கராஜ், கணேசன்,வடகரை ராமர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com