திருநெல்வேலி மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்துக்குப் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமுமுக மாநிலத் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தில் நைனார் முஹம்மது தலைமையில் செயல்பட்டு வந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட நிர்வாகம் பெரும்பாலான தலைமைக் குழுவின் ஒப்புதலுடன் கலைக்கப்பட்டு, புதிய பொறுப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. கழகத்தினர் பொறுப்புக் குழுவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
பொறுப்புக் குழு தலைவர்- புளியங்குடி எம்.எஸ். அப்துர் ரஹ்மான், பொறுப்புக் குழு உறுப்பினர்கள்- தென்காசி முகம்மது யாகூப், சங்கரன்கோவில் திவான் மைதீன், புளியங்குடி அப்துல் மஜீதி, தென்காசி முகமது பிலால், பண்பொழி செய்யது அலி, தென்காசி அகமதுஷா.