சங்கரன்கோவில் அருகே இளைஞரை இரும்புக் கம்பியால் தாக்கியதாக 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
சங்கரன்கோவில் அருகே பி.ரெட்டியபட்டியைச் சேர்ந்த நாகராஜ் மகன் விஜயகுமார் (40). இவர் சொந்தமாக கார் வைத்து அதை வாடகைக்கு விட்டு வருகிறார். இவருக்கும் இவரது அடுத்த வீட்டில் வசிக்கும் ராஜ் மகன் ஆதிமூலத்துக்கும் நடைபாதை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாம்.இந்நிலையில், விஜயகுமார் புதன்கிழமை வீட்டில் இருந்தபோது ஆதிமூலம் அவரது சகோதரர் கணேசன், சகோதரி வசந்தா, தாய் ஆவுடைத்தாய் உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து விஜயகுமாரை இரும்புக் கம்பியால் தாக்கினார்களாம்.
இதில் பலத்த காயம் அடைந்த விஜயகுமார் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில், சின்னக்கோவிலான்குளம் போலீஸார் ஆதிமூலம் உள்ளிட்ட 6பேர் மீது வழக்குப் பதிந்து, அவர்களைத் தேடி வருகின்றனர்.