கீழப்பாவூர் கூட்டுறவு கடன் சங்கம் ரூ.15.78 கோடி கடன் அளிப்பு

கீழப்பாவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ரூ.15.78 கோடிக்கு கடன் வழங்கியுள்ளது.

கீழப்பாவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ரூ.15.78 கோடிக்கு கடன் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநர் ஆ.ரேவதி சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கீழப்பாவூர்  தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் பயிர்க் கடனாக ரூ.297.15 லட்சம், நகைக் கடனாக ரூ.910.14 லட்சம், தானிய ஈட்டுக் கடனாக ரூ.249.72 லட்சம், மகளிர் குழுக் கடனாக ரூ.77.78 லட்சம்,  வீட்டுக் கடனாக ரூ.9.50 லட்சம்,  இதர வகை கடனாக ரூ.33.45 லட்சம் என மொத்தம் ரூ.15.78 கோடி கடன் வழங்கியுள்ளது. 
மேலும் 2017-18-ஆம் ஆண்டில் ரூ.32.23 லட்சம் லாபம் ஈட்டி உறுப்பினர்களுக்கு 14 சதவீத ஈவுத் தொகை வழங்கியுள்ளது.  சங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள பொது சேவை மையம் மூலம் வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, ஜாதிச் சான்று, முதல் பட்டதாரிச் சான்று, இதர பிற்பட்ட வகுப்பினர் சான்று, திருமண உதவி திட்டம்,  இரண்டு பெண் குழந்தைகள் திட்டம் மற்றும் பட்டா மாறுதல் ஆகிய சேவைகள் கிராமப்புற மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  உரங்கள் அரசு நிர்ணய விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. சங்கத்தில் தனிநபர் பாதுகாப்பு பெட்டக வசதியும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com