பாளை. என்.ஜி.ஓ. காலனி கூட்டுறவு மருந்தகத்தில் தீ விபத்து

பாளையங்கோட்டையில் இயங்கி வரும் கூட்டுறவு மருந்தகத்தில் புதன்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

பாளையங்கோட்டையில் இயங்கி வரும் கூட்டுறவு மருந்தகத்தில் புதன்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் இயங்கி வரும் கூட்டுறவு மருந்தகத்தில் சலுகை விலையில் மருந்து-மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம், என்.ஜி.ஓ. ஏ மற்றும் பி காலனி, திருமால்நகர், ஜெபாகார்டன், சேவியர்காலனி, ராஜராஜேஸ்வரிநகர், பெருமாள்புரம் பகுதி மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்த மருந்தகத்தில் பயன்பாட்டில் இருந்த கணினியில் திடீரென தீப்பற்றியதாம். தகவலறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com