திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மனோஜ் பாண்டியன், திசையன்விளை சுற்றுவட்டாரப் பகுதியில் வாக்காளர்களுக்கு திங்கள்கிழமை நன்றி தெரிவித்தார்.
திசையன்விளை வடக்கு பஜார், காந்திஜி ரோடு, மணலிவிளை, இடையன்குடி, ஆனைகுடி, குட்டம், கூடுதாழை, உவரி, பரதர் உவரி உள்ளிட்ட கிராமங்களுக்கு திறந்த வாகனத்தில் சென்று, வாக்காளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். அப்போது, திசையன்விளை முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஏ.கே.சீனிவாசன், நகர அம்மா பேரவைச் செயலர் வி.பி.ஜெயகுமார், சுடலைமணி உள்பட பலர் உடனிருந்தனர்.