நிலா இலக்கிய வட்டம் சார்பில் நிலா முற்ற இலக்கியக் கூட்டம் பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் நடைபெற்றது.
நிலா இலக்கிய வட்டத் தலைவர் பா.வளன் அரசு தலைமை வகித்தார். பொறுப்பாளர் ந.ராஜ கோபால் வரவேற்றார். "சிந்தனைச் சிரிப்பின் தலைமகன்' என்ற தலைப்பில் ப.பாலகிருஷ்ணன் பேசினார். கூட்டத்தில், சிவ சத்திய மூர்த்தி, ம. அய்யப்பன், அ.ராசகிளி, ராம வெங்கடாச்சலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொருளாளர் ரா.முருகன் நன்றி கூறினார்.