தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்க 3ஆவது வட்ட மாநாடு பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வட்டாரத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஈனமுத்து வரவேற்றார். இணைச் செயலர் பாலசுப்பிரமணியன் மாநாட்டை தொடங்கிவைத்தார். வட்டார நிர்வாகிகள் முருகையா, கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் சீரான குடிநீர் விநியோகத்தை உறுதிப்படுத்த வேண்டும். கே.டி.சி.நகர், வி.எம்.சத்திரம், தூத்துக்குடி நான்குவழிச்சாலைகளில் கூடுதலாக மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் ராமகுரு தலைமையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.