பாவூர்சத்திரத்தில் வியாபாரி மரணம்

பாவூர்சத்திரத்தில் வியாபாரி உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். 

பாவூர்சத்திரத்தில் வியாபாரி உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். 
பாவூர்சத்திரம் அருகே உள்ள திருமலாபுரம் நடுத் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (60). இவர் மோட்டார் சைக்கிள் மூலம் ஊர், ஊராகச் சென்று காய்கனி வியாபாரம் செய்து வந்தார். திங்கள்கிழமை காலை வியாபாரத்துக்கு சென்ற இவர், மாலையில் வீடு திரும்ப வில்லையாம். 
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை பாவூர்சத்திரம் கடையம் சாலையில் உள்ள கடை முன் அவர் இறந்து கிடந்துள்ளது தெரிய வந்தது. சடலத்தை கைப்பற்றிய பாவூர்சத்திரம் போலீஸார் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் உயிரிழந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com