மூலைக்கரைப்பட்டி, மூன்றடைப்பில் தூங்கிய பெண்களிடம் நகை பறிப்பு

மூன்றடைப்பு, மூலைக்கரைப்பட்டி பகுதிகளில் வீட்டில் தூங்கிய பெண்களிடம்  தங்கச் சங்கிலிகளைப் பறித்து சென்ற மர்ம


வள்ளியூர்/திசையன்விளை: மூன்றடைப்பு, மூலைக்கரைப்பட்டி பகுதிகளில் வீட்டில் தூங்கிய பெண்களிடம்  தங்கச் சங்கிலிகளைப் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
மூன்றடைப்பு அருகேயுள்ள ஆழ்வார்நேரியைச் சேர்ந்த ஜெயக்குமார் மனைவி கிறிஸ்டி(35). இவர், குடும்பத்தினருடன் வீட்டு வராண்டாவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தூங்கிக்கொண்டிருந்தாராம். இந்நிலையில்,  மர்ம நபர் ஒருவர், கிறிஸ்டி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்தாராம். இதில், விழித்துக்கொண்ட கிறிஸ்டி சப்தம்போடவே, அந்த நபர் கையில் சிக்கிய நகையுடன் தப்பிவிட்டாராம்.
மேலும், அதே பகுதி புதுக்குறிச்சியைச் சேர்ந்த கணபதி மனைவி ராமலெட்சுமி(40), குடும்பத்தினருடன் வீட்டு மாடியில் தூங்கிக்கொண்டிருந்தாராம். அவரிடமும் அதிகாலையில் 3 பவுன் தங்கச் சங்கிலியை மர்மநபர் பறித்துக்கொண்டு தப்பிவிட்டாராம். 
மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள ஆனையப்பபுரத்தைச் சேர்ந்த சுந்தரம் மனைவி அங்கம்மாள் (55),  தனது வீட்டின் முற்றத்தில் அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது,  அவர்  கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை மர்மநபர் பறித்துக்கொண்டு தப்பினாராம். இச்சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில், மூன்றடைப்பு, மூலைக்கரைப்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com