அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்கத்தினர் திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட கருவூல அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு ஊழியர் சங்கத்தினர் திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட கருவூல அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத் தலைவர் வீ.பார்த்தசாரதி தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலர்கள் ரா.பேராச்சி, பொன்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் துரைசிங் கோரிக்கை குறித்த விளக்கமளித்தார். அரசு கருவூலத்துறையின் நடவடிக்கைகள் அனைத்தும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைப்பு என்ற பெயரில் தமிழக அரசால் கையாளப்பட்டு வருகிறது. இதில் உள்ள குறைபாடுகளை நீக்கவேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியத்தை பழைய முறையிலேயே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட இணைச் செயலர் பா.கோவில் பிச்சை நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com