கம்பராமாயண  சொற்பொழிவு

நெல்லை கம்பன் கழகம் சார்பில் 488ஆவது கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவு பாளையங்கோட்டை

நெல்லை கம்பன் கழகம் சார்பில் 488ஆவது கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவு பாளையங்கோட்டை ராமசாமி கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீதியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். அ.முருகேசன் இறைவணக்கம் பாடினார். மருத்துவர் இளங்கோவன் செல்லப்பா வரவேற்றார். ராஜபாளையம் பேராசிரியர் கொ.பூமிநாதன், "கம்ப நாடகம்' எனும் தலைப்பில் விரிவுரை ஆற்றினார். கம்பன் கழகத் தலைவர் பேராசிரியர் சிவ.சத்தியமூர்த்தி கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவில் "ஆரண்ய காண்டம்' எனும் தலைப்பில் இசைப் பேருரை வழங்கினார். கம்பன் கழகச் செயலர் கவிஞர் பொன்.வேலுமயில் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் முத்துக்குமார், சேதுமாதவன், மகாராஜன், பேராச்சிமுத்து, ஐயப்பன், பேச்சிமுத்து கெருடப்பன், குகநமச்சிவாயம், பாண்டியன், வெள்ளத்துரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com