மேலப்பாளையம் அருகே தீக்காயமடைந்த மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
கருங்குளம் பீடி காலனியைச் சேர்ந்த சுப்பையா மனைவி லட்சுமி(70). இவர் கடந்த சனிக்கிழமை வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்தபோது, அவரது உடையில் தீ பற்றிக்கொண்டதாம். இதில் பலத்த காயமடைந்த அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.