பாவூர்சத்திரம் பகுதி பள்ளிகளில் 1,345 மாணவர், மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது.
பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஒளவையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, குறும்பலாப்பேரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர், மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிகளுக்கு தென்காசி எம்.எல்.ஏ. எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்து, மாணவர், மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.
இதில், ஒளவையார் பள்ளியில் 1,111 பேர், சொக்கலால் ஆண்கள் பள்ளியில் 184 பேர், மேலப்பாவூர் பள்ளியில் 50 பேர் என மொத்தம் 1,345 பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிகளில் தலைமை ஆசிரியர்கள் ராமச்சந்திரன், செளந்தர சேகரி, சித்ரா, அதிமுக ஒன்றியச் செயலர் அமல்ராஜ், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்கள் தமிழ் என்ற ராமசாமி, இளமதி, அதிமுக நிர்வாகிகள் குணம், பால் அன்புராஜா, ராமசாமி, ஐவராஜா, இருளப்பன், ரமேஷ், மயில்வேலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.