வள்ளியூரில் ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் கால்கள் துண்டிப்பு

வள்ளியூரில் ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் கால்கள் துண்டிக்கப்பட்டன.

வள்ளியூரில் ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் கால்கள் துண்டிக்கப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையைச் சேர்ந்தவர் நரேஸ்(26). இவர், செவ்வாய்க்கிழமை ரயிலில் நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தாராம். ரயில் வள்ளியூர் ரயில் நிலையம் வந்தபோது தவறி கீழே விழுந்துவிட்டாராம். இதில் அவரது இரு கால்களும் ரயில் சக்கரத்தில் சிக்கி, துண்டிக்கப்பட்டன. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவரை மீட்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நாகர்கோவில் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com