நெல்லையில் ஆற்றில் மூழ்கிஇளைஞர் பலி

திருநெல்வேலி அருகேயுள்ள கருப்பந்துறை தாமிரவருணி ஆற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழந்தார்.  


திருநெல்வேலி அருகேயுள்ள கருப்பந்துறை தாமிரவருணி ஆற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழந்தார்.  
மேலப்பாளையம், கொட்டிகுளம், செல்வ விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து. சோடா கம்பெனி நடத்தி வருகிறார்.  இவரது மகன் ஐயப்பன் (21).  பட்டதாரி. இவர், கருப்பந்துறை தாமிரவருணி ஆற்றில் சனிக்கிழமை குளித்துள்ளார்.  அப்போது ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற ஐயப்பன் தண்ணீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அருகே குளித்துக்கொண்டிருந்தவர்கள்,  ஐயப்பனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து திருநெல்வேலி சந்திப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com