நெல்லையில் நாளை காங்கிரஸ் தேர்தல் பணி ஆயத்தக் கூட்டம்

காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவைத் தேர்தல் பணி ஆயத்தக் கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 3) நடைபெற உள்ளது.

காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவைத் தேர்தல் பணி ஆயத்தக் கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 3) நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.சங்கரபாண்டியன் வெளியிட்ட அறிக்கை: காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவைத் தேர்தல் பணி ஆயத்தக் கூட்டம் திருநெல்வேலி தச்சநல்லூரில் உள்ள வெல்கம் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 3) மதியம் 1 மணிக்கு நடைபெற உள்ளது. 
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் சஞ்சய்சத், செயல் தலைவர்கள் மயூரா எஸ்.ஜெயக்குமார், ஹெச்.வசந்தகுமார் எம்.எல்ஏ.,  திருநெல்வேலி மாவட்ட பொறுப்பாளர்கள் சுடலையாண்டி, ராணி வெங்கடேசன், செந்தாமரை கண்ணன், முன்னாள் மத்திய இணையமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோர் பேச உள்ளனர்.  மாவட்டம் முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்,  தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com