திருமால்நகரில் வள்ளலார் தமிழ் மன்றக் கூட்டம்

திருநெல்வேலி அருகேயுள்ள திருமால்நகர் மக்கள் நல்வாழ்வுச் சங்கத்தில் வள்ளலார் தமிழ் மன்றக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

திருநெல்வேலி அருகேயுள்ள திருமால்நகர் மக்கள் நல்வாழ்வுச் சங்கத்தில் வள்ளலார் தமிழ் மன்றக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியை வே.விஜயா தலைமை வகித்தார். பொதுப்பணித் துறை ஓய்வுபெற்ற கண்காணிப்பாளர் சு.கௌரி லட்சுமி முன்னிலை வகித்தார். 
வள்ளியூர் நேரு செவிலியர் கல்லூரி உதவிப் பேராசிரியை மா.பா. மகாலட்சுமி வரவேற்றார். ஸ்ரீ லலிதா வித்யாஷ்ரம் பள்ளி மாணவி மு.ஹபிஷா மரியம் "அப்துல்கலாமின் பொன்மொழிகள்' என்ற தலைப்பிலும், ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி வணிகவியல் துறை மாணவி தா.மரகதம் "அன்னை சாரதா தேவி சரிதம்' என்ற தலைப்பிலும் பேசினர். 
தூய சவேரியார் கல்லூரி பேராசிரியை ரா.பிரின்ஸி, "பெண்களும் இயற்கையும்' என்ற பொருளில் பேசினார். தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் பி.உலகம்மாள் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com