பாளையங்கோட்டை அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
பாளையங்கோட்டையை அடுத்த கக்கன்நகரைச் சேர்ந்த துரைப்பாண்டி மகன் முகேஷ்குமார்(30). இவர் கடந்த 4ஆம் தேதி தனது வீட்டு மாடியில் செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது அவர் திடீரென்று மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில் அவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.