ஓய்வூதிய உயர்வை அமல்படுத்த ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

மத்திய அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய உயர்வை அமல்படுத்த வேண்டும் என்று ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்

மத்திய அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய உயர்வை அமல்படுத்த வேண்டும் என்று ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் நல சங்கத்தின் மாநில அமைப்பாளர் தெ. ஆறுமுகம் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக அவர் வெளியிட்ட  அறிக்கை: 
மத்திய அரசு பட்ஜெட்டில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு 50 சதம் ஊதிய உயர்வு அறிவித்துள்ளது.  எனவே இதை மாநில அரசு அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வாகவும்,  ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதிய உயர்வாகவும் வழங்க வேண்டும்.  ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ரூ.7 ஆயிரத்து 850 உடன் அகவிலைப்படி இணைத்து குடும்ப ஓய்வூதியமாக வழங்க வேண்டும். மருத்துவ படியாக ரூ. 500 வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com