திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவலர் நல உணவகம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பொதுமக்கள் மற்றும் காவலர்கள் பயன்பெறும் வகையில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவலர் நல உணவகம் கட்டப்பட்டு வந்தது. இந்த உணவகத்தின் கட்டுமானப் பணி முடிந்ததையடுத்து திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநகர காவல் ஆணையர் பாஸ்கரன், விழாவில் பங்கேற்று உணவகத்தை திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையர் பெரோஸ்கான் அப்துல்லா, கூடுதல் துணை ஆணையர் குமாரசாமி, உதவி ஆணையர்கள் நாக சங்கர், ஆனந்தராஜ், ஜெயராஜ், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் பங்கேற்றனர்.