நாகசுரம், தவில் இசைக் கலைஞர்கள் சங்க மாநாடு திருநெல்வேலி சந்திப்பில் நடைபெற்றது.
இந்த மாநாட்டுக்கு ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி தாளாளர் பக்தானந்த மகராஜ் தலைமை வகித்தார். ஸ்ரீ சேர்மன் அருணாசல சுவாமி கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டியன் முன்னிலை வகித்தார். அதிமுக மாநகர் மாவட்டச் செயலர் தச்சை என்.கணேச ராஜா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
கூட்டத்தில், வறுமையில் வாடும் கலைஞர்களுக்கு இலவச நாகசுரம், தவில் கருவிகளை அரசு வழங்க வேண்டும். இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
சங்க பொதுச் செயலர் ஆர்.எஸ். மணிகண்டன், துணைத் தலைவர் இ.மணிகண்டன், துணைச் செயலர் எஸ்.பாலமுருகன், பொருளாளர் மாரியப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.