பணகுடி அருகே  வாகனச் சோதனையில்  ரூ. 2 லட்சம் பறிமுதல்

கேரள மாநிலத்தில் இருந்து உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த ரூ. 2.04 லட்சத்தை பறக்கும்படை

கேரள மாநிலத்தில் இருந்து உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த ரூ. 2.04 லட்சத்தை பறக்கும்படை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
மக்களவைத் தேர்தலில் ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பல்வேறு இடங்களில் முகாமிட்டு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, பறக்கும்படை அதிகாரி ராஜசேகர் தலைமையில் அதிகாரிகள் பணகுடியில் வாகனச் சோதனை மேற்கொண்டனர்.  பின்னர் பணகுடி பிரிவிரிசூரியன் கிராமம் அருகே வாகனச் சோதனையின்போது, கேரள மாநிலத்தில் இருந்து வந்த  வாகனத்தை ஆய்வு செய்தனர். வாகனத்தில் உரிய ஆவணம் எதுவும் இல்லாமல் தனியார் பண்ணை உரிமையாளர் சுஜின்,  ரூ. 2.04 லட்சம் கொண்டு வந்தது தெரியவந்தது. 
இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும்படை அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரி முருகன், ராதாபுரம்  வட்டாட்சியர் செல்வன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். இப்பணம் சார்நிலைக் கருவூலகத்தில் செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com