பாளையங்கோட்டை வடபகுதியில் உள்ள ஹரி ஓம் சக்தி நாராயண ஜோதிபதி தர்ம தாங்கலில் திருஏடு வாசிப்பு திருவிழாவையொட்டி வாகன பவனி மற்றும் அன்னதானம் ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக் கோயிலில் ஆண்டுதோறும் அகிலத்திரட்டு அம்மானை என்னும் திருஏடு வாசிப்பு திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி நிகழாண்டுக்கான விழா கடந்த 8 ஆம் தேதி தொடங்கியது. திரு ஏடு வாசிப்பு, இரவு உகப்பெருக்கு பணிவிடை நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை இரவு உகப்பெருக்கு பணிவிடை, சிறப்பு அன்னதானம், 10 மணிக்கு திருக்கல்யாண வாசிப்பு, 11 மணிக்கு அய்யா அன்னவாகனத்தில் பவனி ஆகியவை நடைபெற்றன.
ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17) மாலை 6 மணிக்கு பட்டாபிஷேக வாசிப்பு, இரவு 8 மணிக்கு கருட வாகனத்தில் அய்யா வாகன பவனி, 9 மணிக்கு உகப்பெருக்கு பணிவிடை, சிறப்பு அன்னதானம் ஆகியவை நடைபெறுகிறது.