திருநெல்வேலி தெற்கு மாவட்ட பாமக தேர்தல் ஆலோசனைக் கூட்டம் திசையன்விளையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட த் தலைவர் பழனி தலைமை வகித்தார். திசையன்விளை நகர துணைச் செயலர் ஜி.குருசாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவர் எஸ்.குருநாதன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
மாவட்ட அமைப்பு செயலர் சித்திரைவேல், மாவட்ட மீனவர் அணிச் செயலர் ஜெரால்டு வீரச்சந்திரன், மாவட்டச் செயலர் கார்த்தீசன், மாவட்ட துணைத் தலைவர் மோதிரப்பாண்டி, ராதாபுரம் ஒன்றியச் செயலர் ஜி.பால்ராஜ், வள்ளியூர் ஒன்றியச் செயலர் பொன்னுத்துரை, களக்காடு ஒன்றியச் செயலர் ஏசுதாசன், களக்காடு ஒன்றிய இளைஞரணிச் செயலர் எம்.குமரேசன், மாவட்ட அமைப்புத் தலைவர் கிங்ஸ்லி உள்ளிட்டோர் பேசினர்.
பாமக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபட வேண்டும், பூத் கமிட்டியாளர்கள் நியமிப்பது, மார்ச் 17 ஆம் தேதி முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகரச் செயலர் மணிகண்டன் நன்றி கூறினார்.