தீ விபத்தில் முதியவர் சாவு

திருநெல்வேலி தச்சநல்லூரில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.


திருநெல்வேலி தச்சநல்லூரில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.
தச்சநல்லூர் மாவடி குறுக்குத்துறையைச் சேர்ந்த இசக்கி மகன் ராமையா (80). இவர் அங்கு உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தாராம்.  உறவினர்கள் அக்கம் பக்கத்தில் வசித்து வந்துள்ளனர்.  இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதி இரவு  கொசுவத்தி சுருள் ஏற்றி வைத்துவிட்டு தூங்கச் சென்றாராம்.  அப்போது கொசுவத்திச் சுருளில் இருந்து படுக்கையில் தீப்பிடித்து அவர் மீதும் பற்றி எரிந்துள்ளது.  தீ எரிவதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், ராமையாவை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.  இதுகுறித்து தச்சநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com