ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே மருந்து கடை பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
ஆலங்குளம் அருகேயுள்ள பண்டாரகுளத்தைச் சேர்ந்த மரிய மிக்கேல் மகன் அருள்ராயன் (40). ஆலங்குளம் பேருந்து நிலையம் எதிரே மருந்து கடை வைத்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை கடை ஊழியர் கடையை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததாம். அவர் அருள் ராயனுக்கு தகவல் அளித்தவுடன் அவர் வந்து கடையைத் திறந்து பார்த்த போது, அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ. 48 ஆயிரம் மற்றும் குழந்தைகள் உணவுப் பொருள்கள் திருடு போயிருந்ததாம்.
இதுகுறித்து அருள்ராயன் ஆலங்குளம் போலீஸில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கை ரேகை நிபுணர் அகஸ்டா கனகமணி வந்து ஆய்வு மேற்கொண்டார்.