செங்கோட்டையில் நகர அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மக்களவை தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்ட இந்த கூட்டத்துக்கு, அவைத் தலைவர் முத்துவேல் தலைமை வகித்தார். நகரச் செயலர் முத்தையா முன்னிலை வகித்தார். மாவட்ட வழக்குரைஞர் பிரிவுச் செயலர் பழனிக்குமார் வரவேற்றார். கூட்டத்தில், மக்களவை தேர்தலில் அமமுக வேட்பாளர்கள் வெற்றிக்கு கடினமாக உழைத்து, அவர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன்.
கூட்டத்தில், இணைச் செயலர் ராமசாமி, ஜெயலலிதா பேரவைச் செயலர் பரமசிவன், வார்டு செயலர்கள் இசக்கித்துரை, ஆவுடையப்பன், கனி, சொரிமுத்து, கணேசன், சுப்பிரமணியன், அசார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.