தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வரும் 23மற்றும் 24 ஆகிய இருதினங்கள் தொகுதி வாரியாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பொ.சிவபத்மநாதன் வெளியிட்ட அறிக்கை:
தென்காசி மக்களவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் தனுஷ் எம்.குமார் போட்டியிடுகிறார்.
இதை முன்னிட்டு தொகுதி வாரியாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது. வரும் 23ஆம் தேதி காலை 10 மணியளவில் வாசுதேவநல்லூர் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் சிவகிரி தேவர் திருமண மண்டபத்திலும், மாலை 5 மணியளவில் சங்கரன்கோவில் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் சங்கரன்கோவில் ஏஏஆர் மகாலிலும் நடைபெறுகிறது.
கடையநல்லூர் தொகுதி செயல்வீரர்கள்கூட்டம் 24ஆம் தேதி காலை 10 மணியளவில் கடையநல்லூர் மாவடிக்கால் வடுகாயர் யாதவர் திருமண மண்டபத்திலும், தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் மாலை 5 மணியளவில் குத்துக்கல்வலசை ஏஆர்ஆர் மகாலிலும் நடைபெறுகிறது என்றார் அவர்.