தென்காசி நூலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு போட்டி புதன்கிழமை (மார்ச் 20) நடைபெறுகிறது.
இதுகுறித்து தென்காசி நூலகர் பிரம்மநாயகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையம், மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்காசி வட்டார நூலகம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது. "எனது வாக்கு எனது உரிமை' என்ற தலைப்பில் தென்காசி வட்டார நூலக வளாகத்தில் புதன்கிழமை (மார்ச் 20) காலை 10 மணியளவில் போட்டி நடைபெறுகிறது.
இப்போட்டியில் பொதுமக்கள், கல்லூரி, பள்ளி மாணவர், மாணவிகள், வாசகர்கள் கலந்துகொள்ளலாம்.
போட்டியில் முதல் மூன்று இடம் பெறுபவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் செயல்விளக்கமும் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது.
போட்டியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் 9994038558, 9944317543 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என்றார் அவர்.