வள்ளியூர் பிரேம் நர்ஸிங் கல்லூரி, பிரேம் மருத்துவமனை சார்பில் தொற்றுநோய் தடுப்பு மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
திருவள்ளுவர் கலையரங்கில் இருந்து புறப்பட்ட பேரணியை வள்ளியூர் வியாபாரிகள் சங்கத் தலைவர் பி.டி.பி.சின்னதுரை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
முக்கிய வீதிகள் வழியாக சென்று பிரேம் நர்ஸிங் கல்லூரியை சென்றடைந்தது. பேரணியில் பிரேம் மருத்துவமனை மருத்துவ அதிகாரி ஜார்ஜ் திலக், நர்ஸிங் கல்லூரி முதல்வர் இதய ரோஜா திலக், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பீர்ஜலால், ராமமூர்த்தி, சங்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பயிற்றுநர் மெர்லின் ஷீலா வரவேற்றார். பொன்னரசி நன்றி கூறினார்.