திசையன்விளையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்

திசையன்விளையில் மதச்சார்பற்ற  முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.


திசையன்விளையில் மதச்சார்பற்ற  முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி  மக்களவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு  கூட்டணி சார்பில்  ஞானதிரவியம் போட்டியிடுகிறார்.  இதையடுத்து, ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் திசையன்விளையில் நடைபெற்றது. 
திமுக மாவட்டச் செயலர் இரா.ஆவுடையப்பன் தலைமை வகித்தார். ராதாபுரம் ஒன்றியச் செயலர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் வரவேற்றார். திமுக மாநில செயற்குழு உறுப்பினர் ஜோசப் பெல்சி தொகுத்து வழங்கினார்.
முன்னாள் மத்திய இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் அமைச்சர் பூங்கோதை,  முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு,  முன்னாள் மாவட்ட ஊராட்சித்  தலைவர் கிரகாம்பெல், வழக்குரைஞர் தவசிராஜன்,   காங்கிரஸ்  கட்சி மாவட்டத் தலைவர் சிவக்குமார், திசையன்விளை முன்னாள் பேரூராட்சித் தலைவர் சேம்பர் செல்வராஜ்,  விடுதலைச்சிறுத்தைகள் புறநகர் மாவட்டச் செயலர் சுந்தர், மமக மாவட்டத் தலைவர் ரசூல் மைதீன்,  தமுமுக மாவட்டத் தலைவர் பிலால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் மீரான்,  மதிமுக மாவட்டப் பொருளாளர் ரைமண்ட்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் கே.ஜி.பாஸ்கரன்,  இந்திய கம்யூனிஸ்ட் வட்டச்  செயலர் சேதுராமலிங்கம்,  ராஜம் உள்ளிட்டோர் பேசினர். 
முன்னாள் லயன்ஸ் கவர்னர் சுயம்புராஜன்,  திமுக முன்னாள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அனிதாபிரின்ஸ், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் தனபால், அவைத் தலைவர் ரெங்கசாமி, காங்கிரஸ்  கே.பி.கே. ஜெயகுமார்  உள்பட கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். திசையன்விளை நகர திமுக செயலர் டிம்பர் செல்வராஜ் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com