அதிமுக கூட்டணி வேட்பாளர் கிருஷ்ணசாமி வாக்கு சேகரிப்பு

சங்கரன்கோவில் சட்டப் பேரவைத் தொகுதியில்  தென்காசி மக்களவைத்  தொகுதி அதிமுக கூட்டணி புதிய தமிழகம்

சங்கரன்கோவில் சட்டப் பேரவைத் தொகுதியில்  தென்காசி மக்களவைத்  தொகுதி அதிமுக கூட்டணி புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் மருத்துவர் கிருஷ்ணசாமி வாக்கு சேகரித்தார். 
சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் உள்ள செளபாக்கிய விநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவர்,  அங்கிருந்தே வாக்குச் சேகரிப்பைத் தொடங்கினார். தொடர்ந்து தேரடித் திடல், திரு.வி.க.தெரு, ராமசாமியாபுரம் தெரு, திருவள்ளுவர்சாலை, பிரதானசாலை மற்றும் நகரின் முக்கிய வீதிகளில்  வாக்கு சேகரித்தார்.  அப்போது அவர் பேசியது:
சங்கரன்கோவிலில் வேலை வாய்ப்பை உருவாக்கவும், தொகுதி வளர்ச்சிக்காகவும் நாடாளுமன்றத்தில் குரல் ஒலிக்க ஒரு வாய்ப்பு கொடுங்கள்.   நாடு வலிமையான தலைவரின் கீழ்  இருக்கிறது. சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளர்களுக்கு 750 யூனிட்  மின்சாரம் வழங்கப்படுகிறது.  நான் மக்களவைக்கு சென்றால்,  அதை 1000 யூனிட் இலவசமாக வழங்க தமிழக அரசிடம் வலியுறுத்துவேன்.  ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார் அவர். அவருடன் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமியும் வாக்கு சேகரித்தார்.
வாக்குச் சேகரிப்பின் போது,   முன்னாள் நகர் மன்றத் தலைவர் கே.கண்ணன், நகரச் செயலர் ஆறுமுகம்,  தொகுதி முன்னாள் இணைச் செயலர் வேலுச்சாமி,  பாஜக மாவட்டச் செயலர் சுப்பிரமணியன், புரட்சி பாரதம் மாநில அமைப்புச் செயலர் ராஜமன்னார், பாட்டாளி மக்கள் கட்சி நகரத் தலைவர் கருப்பசாமி,   நகரத் தலைவர் முகம்மதுஅயூப், புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த  சுப்பிரமணியன்,ராஜேந்திரன், எம்.நிவாஸ், வழக்குரைஞர் மாரியப்பன்,  முன்னாள் நகர் மன்ற   உறுப்பினர்கள் ஆனந்த், சரவணன் உள்பட பலர்  உடன்  சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com