சுரண்டை ஸ்ரீஅழகுபார்வதி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோயிலில் ஆண்டு தோறும் 10 நாள்கள் சித்திரைத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். நிகழாண்டு திருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை காலையில் நடைபெற்றது. விழாநாள்களில், 7 சமுதாயத்தைச் சேர்ந்த மண்டகப்படிதாரர்களால் அம்மனுக்கு சிறப்பு பூஜை, கலைநிகழ்ச்சி, சப்பர வீதியுலா உள்ளிட்டவை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக 9ஆம் திருநாளான மே 8ஆம் தேதி மாலை 3 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜையைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள, தேரோட்டம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் 7 சமுதாய தலைவர்கள் செய்து வருகின்றனர்.