கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பில் கோடைகால இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு ஜாமிஆ நஜாஹ் கல்லூரி முதல்வர் பஷீர்அஹ்மத் உமரி தலைமை வகித்தார். முகாமில் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, எழுத்துப்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இதில், 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் ஜபருல்லாஹ் பத்ரி, ரபீக்அஹ்மது,கலந்தரி இப்ராஹீம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.முஹம்மது கோரி நன்றி கூறினார்.