கடையநல்லூர் அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளித்த பள்ளி மாணவர் வெள்ளிக்கிழமை மூழ்கி இறந்தார்.
கடையநல்லூர் அருகே முத்துகிருஷ்ணாபுரம் சுடலைமாடன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் குருசாமி (16) . இடைகாலில் தனியார் பள்ளியில் பிளஸ் 1 பயின்று வந்தார். இவர், அங்குள்ள கிணற்றில் குளிப்பதற்காக நண்பர்களுடன் சென்றாராம். குளித்துக் கொண்டிருந்த குருசாமி, கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்த கடையநல்லூர் தீயணைப்புபடையினர்மற்றும் போலீஸார் குருசாமி சடலத்தை மீட்டனர். இது குறித்து கடையநல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.