கிணற்றில் மூழ்கி மாணவர் சாவு

கடையநல்லூர் அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளித்த பள்ளி மாணவர் வெள்ளிக்கிழமை மூழ்கி இறந்தார். 

கடையநல்லூர் அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளித்த பள்ளி மாணவர் வெள்ளிக்கிழமை மூழ்கி இறந்தார். 
கடையநல்லூர் அருகே முத்துகிருஷ்ணாபுரம் சுடலைமாடன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் குருசாமி (16) . இடைகாலில் தனியார் பள்ளியில் பிளஸ் 1 பயின்று வந்தார். இவர், அங்குள்ள கிணற்றில் குளிப்பதற்காக நண்பர்களுடன் சென்றாராம். குளித்துக் கொண்டிருந்த குருசாமி, கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்த கடையநல்லூர் தீயணைப்புபடையினர்மற்றும் போலீஸார் குருசாமி சடலத்தை மீட்டனர். இது குறித்து கடையநல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com