கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி அருள்மிகு சந்தன மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை (மே 3) பூக்குழி நடைபெறுகிறது.
இக்கோயிலின் பூக்குழி திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை காப்பு கட்டுடன் தொடங்கியது. அன்று முதல் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் விரதம் மேற்கொண்டு வருகின்றனர். இதையொட்டி தினமும் சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார, பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.
விழாவையொட்டி, புதன்கிழமை அன்னதானம் நடைபெற்றது. வியாழக்கிழமை தீர்த்தம் எடுத்து வரும் வைபவம் நடைபெறும்.விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. மாலை முளைப்பாரி ஊர்வலம் ,அக்னிச்சட்டி ஊர்வலம் மற்றும் பூக்குழி நடைபெறும் .ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.