பாளை.யில் இலக்கிய நிகழ்ச்சி

தமிழ் முழக்கப் பேரவை சார்பில், பாளையங்கோட்டை சைவ சபையில் இலக்கிய நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

தமிழ் முழக்கப் பேரவை சார்பில், பாளையங்கோட்டை சைவ சபையில் இலக்கிய நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு சைவ சபை நாவலர் கு.சடகோபன் தலைமை வகித்தார். கம்பன் இலக்கிய சங்கச் செயலர் முருகன் வரவேற்றார்.  தமிழ்த்தாத்தா உ.வே.சா. பிறந்த தினத்தையொட்டி அவரின் தமிழ்ப் பணி குறித்து பேரவை அமைப்பாளர் செல்லப்பா பேசினார். தேவநேய பாவாணர் பிறந்த தினத்தையொட்டி அவரைப் பற்றி எம்.எம்.தீன் பேசினார். மேலும் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற கவிஞர் பேராவுக்குப் பாராட்டுவிழாவும் நடைபெற்றது.  கடையநல்லூர் மனோ கல்லூரி முதல்வர் வேலம்மாள் முத்தையா சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் சிவ.சத்திய மூர்த்தி, எழுத்தாளர் நாறும்பூநாதன், முத்துகுமாரசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பொருளாளர் சு.சண்முகவேலன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com