பூபாலசமுத்திரத்திற்கு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க கோரிக்கை

பூபாலசமுத்திரம் கிராமத்திற்கு புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தரும்படி, அப்பகுதி மக்கள் எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூபாலசமுத்திரம் கிராமத்திற்கு புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தரும்படி, அப்பகுதி மக்கள் எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் பூங்கோதை ஆலடிஅருணாவிடம் அவர்கள் அளித்த மனு: கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், பூபாலசமுத்திரம் கிராமத்தில் சுமார் 600 பேர் வசித்து வருகிறோம். இங்கு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 
இது போதுமானதாக இல்லை. இதனால், குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே, தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து கொடுத்தால், தினந்தோறும் குடிநீர் கிடைக்கும். இதனால், எங்கள் பகுதியின் குடிநீர் தேவை பூர்த்திசெய்யப்படும். எனவே, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com